உனக்கான நாளல்ல...



இருபத்தி நான்கு நடக்கின்ற எனக்கு- இன்றுதான்
பத்தொன்பது கடந்தாலும்
பதினான்கிலேயே தந்தையாய் மாறி- சமயத்தில்
யாதுமாகிப் போனதும் நீதான்



















துவண்டு நான்- எத்தனையோ
தடவைகள் தடுக்கி விழுந்திருக்கிறேன்
தூக்கி நிறுத்தியது -உன்
தாங்கல்கள் மட்டும் தான்















தொலை தூரங்கள் -நான்
சென்ற ஒவ்வொரு பயணங்களிலும்
தூங்க இடம் தந்ததும்- உன்
தோள்கள் தான்













ஆண்மைக்குள் மென்மை கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆண்மையில் தாய்மை
முதன்முறை உணர்ந்தது
உன்னிடம்தான்












தந்தையின் பாதுகாப்பும்
தமையனின் பரிவும்- வேண்டுகிற போது
தாயின் அரவணைப்பும்
தாரளமாய்த் தந்திருக்கிறாய்

















எனக்கான நாளுக்கான பதிவு இது- என்
அனைத்துமான சகோதரன்
பத்தொன்பதை நிறைத்து
இருபதை நெருங்கும் -
இப்பூமிக்கு வந்தநாள் 
இது எனக்கான நாள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..