தவம்

ஒரு கை மார் தொட
மற்றையது மெத்தையில் நீளும்
பாதி உடல் கீழே சரிய
மீதி உடம்பில் ஒட்டும்
ஒற்றைக் கால் மடக்கி 
கால் மீது தவளும்
அடுத்த கால் நீட்டி 
மற்றைக் கால் பின்னும்
சுவாச ஓசை பிறை நுதல் கொள்ள
இரு விரல் கொண்டு கேசம் தடவும்
இதய ஓசை காதினுள் செல்ல
கனவு நிலையிலும்
நிம்மதி காணும்

2 கருத்துகள்:

  1. அழகாக இருக்கிறது...
    கவிதையில் மிக அனுபவம் மிக்கவராக இருக்கிறீகளோ...

    அருமையாகவுள்ளது

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பா.. ஒவ்வொரு பதிவையும் வாசித்து என்னை மேலும் மேலும் ஆர்வப்படுத்துகிறீர்கள்..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..