உனக்கான நாளல்ல...



இருபத்தி நான்கு நடக்கின்ற எனக்கு- இன்றுதான்
பத்தொன்பது கடந்தாலும்
பதினான்கிலேயே தந்தையாய் மாறி- சமயத்தில்
யாதுமாகிப் போனதும் நீதான்



















துவண்டு நான்- எத்தனையோ
தடவைகள் தடுக்கி விழுந்திருக்கிறேன்
தூக்கி நிறுத்தியது -உன்
தாங்கல்கள் மட்டும் தான்















தொலை தூரங்கள் -நான்
சென்ற ஒவ்வொரு பயணங்களிலும்
தூங்க இடம் தந்ததும்- உன்
தோள்கள் தான்













ஆண்மைக்குள் மென்மை கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆண்மையில் தாய்மை
முதன்முறை உணர்ந்தது
உன்னிடம்தான்












தந்தையின் பாதுகாப்பும்
தமையனின் பரிவும்- வேண்டுகிற போது
தாயின் அரவணைப்பும்
தாரளமாய்த் தந்திருக்கிறாய்

















எனக்கான நாளுக்கான பதிவு இது- என்
அனைத்துமான சகோதரன்
பத்தொன்பதை நிறைத்து
இருபதை நெருங்கும் -
இப்பூமிக்கு வந்தநாள் 
இது எனக்கான நாள்




உன்மேல வார கோபத்துக்கு....

என்ன எப்பயுமே விழிக்க வைக்கிறது என்னோட போன் தான் அழைப்பது நீதான்...
நீ தூக்கம் விழித்த அடுத்த வினாடியே நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளுவாய்...
“உனக்கு சொல்றது தானே என் தூக்கத்தக் கெடுக்காதே என்று.. எழும்பினா போய் குளிடா...”

சந்திக்கின்ற பொழுதுகளிலும் சதா என்னோடு 
சிரித்துப் பேசிக் கொண்டுதான் வருகிறாய்
என் கைகளையும்​ சமயத்தில் பற்றிக் கொள்வாய் எப்போதுமே உன்னோடு நான் இருப்பேன் என்று அறியப்படுத்த...
'கைய விடு ஒனக்கு சொல்லி இருக்கேன் கையப் புடிக்காத என்று' கையை உதறி விட்டுக்கொண்டே உன்னைப் பார்ப்பேன்..
அப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பாய்..
'கொஞ்சம் நிப்பாட்டுறியா சிரிக்கிறத...' முறைத்துக்கொண்டே நான் சற்று முன்னே நடப்பேன்...

'புதுசா தனுஷ் படம் ரிலீஸாயிருக்கு பார்க்கப் போவமே
தங்கம்...'

மறுபடியும் என் கையைப் பற்றிக் கொண்டே கெஞ்சுவாய்..
ஜோடியா படத்துக்கு வருவேன் நானும்இ சந்தோசமாத்தான்
ஆனா உனக்குச் சொல்ல மாட்டேன் எனக்கும் படம் பார்க்கிறது
புடிக்கும் என்று...

ஆனா அங்கு விசில் சத்தங்களும்
இரட்டை அர்த்த வசனங்களும்
பெண்களையே சாடுகின்ற கேலிப் பேச்சுக்களும் கேட்டுக்
கொண்டுதானிருக்கும்...
அந்த நேரத்தில ஒன்மேல எனக்கு வரும் பாரு ஒருகோபம்...

'இங்க ஏன் என்ன கூட்டி வந்த... ஒனக்குத் தெரியும் தானே
எனக்குப் படம் பார்க்கப் புடிக்காது என்று..'

'பசிக்குதுடா எங்கயாவது போய் சாப்பிடுவமா...'

உன் மேல சாய்ந்துக்கிட்டே நான் கேட்பேன்..
நீயும் எனக்குப் புடிச்ச இடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்து
எனக்கு புடிச்ச உணவுடன் சாக்லட் ப்ளேவர் ஐஸ் க்ரீமும்
டெஸர்ட் என்ற பெயரில் வாங்கி வருவாய்..
சாப்பிட்டு முடிந்த பின்னும் நான் சொல்வேன்..
உனக்கு என்னடா அவ்வளவு கோபம் என்மேல கரைஞ்சு
போன ஐஸ் க்ரீம வாங்கித் தந்த...'

தூங்கப்போற நேரம் போன் பண்ணுவன்..
'என்னப்பா செய்ற? எனக்கு கோல் எடுக்கவேயில்ல...
'இல்ல செல்லம் கொஞ்சம் வேலயா இருக்கேன்..'
'ம்..ஹ்... உனக்குவேலயிருந்தா எனக்குபோன் பண்ண மாட்ட...
வேலயில்லாட்டித்தான் போன் பண்ணுவ அப்பிடியா...
'இல்ல தங்கம்.. நான் உனக்குகோல் பண்ணதான் இருந்தன்
 நீ எடுத்திட்ட....'
'இந்த சமாளிபிகேஷன் எல்லாம் எனக்குட்ட சரிவராது.
அப்போ வேலயில்லாட்டி கம்பனி தரத்தான் நான் இருக்கேன்...'
'ஐயோ...இப்ப ஏன் சண்ட புடிக்கிற?
'ஆமா நான் சண்ட புடிக்கறேன்.. நீ சண்டயே போடாத
ஒருத்திய தேடிப்போய் கல்யாணம் கட்டு... என்ன விடு..
எனக்கு இனிபோன் பண்ணாத....'
நான் அழைப்புத் துண்டித்த தொடர்ச்சியான
அடுத்த நான்கு நிமிடங்களுக்கும்
எனது தொலை பேசிசொல்லிக்கொண்டிருக்கும்...

“Honey calling… Honey calling”

அடுத்த நிமிடத்தில்...

தொலைபேசி தூக்கி நான் இப்போது வாசிக்கிறேன்.
'சண்டை போட்டுட்டே இருக்கிறதுக்கும் நீ தான் டீ எனக்குவேணும்...'
அடுத்த நிமிடம் என் அவனின்  தொலை பேசி சொல்லிக் கொண்டிருக்கும்..
“Chells calling… Chells calling…”
தொலைபேசி தூக்கி நான் இப்போது வாசிக்கிறேன்.
'சண்டை போட்டுட்டே இருக்கிறதுக்கும் நீ தான் டீ எனக்குவேணும்...'
அடுத்த நிமிடம் என் அவனின்  தொலை பேசி சொல்லிக் கொண்டிருக்கும்..
“Chells calling… Chells calling…”

என் அவனே..
உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் எனக்கு கோபத்தில் தான் கழிகிறது
கழிகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் சந்தோசம் தான் நிறைகிறது
கோபத்தில் கூட சந்தோசம் நிறைவது உன்காதலில் மட்டும் தான்
சந்தோசிக்கவே கோபம் கொள்வதும் உன்னில் மட்டும் தான்..

காதலிக்கின்ற கடலலைகள்..


ஒரு ஞாயிற்றுக்கிழமை, எண்ணமுடியாத அளவு ஆண்களும் பெண்களும் எல்லாருமே கடலலைகளுக்கு முன்னேதான் காதலாகிக் கிடந்தாங்க...


நாங்களும் அப்பிடித்தான். அலைகளுக்கு முன்னே காதலாகிக் கிடக்க ஒரு வசதியான இடத்தை சிரமப்பட்டுக் கைப்பற்றிக்கொண்டோம்... 




இவன் வழக்கம் போல “I Love You செல்லம்” ஆரம்பிச்சான்... இவன் I love you வைத் தாண்டி இன்னமொரு I love you…. அதுவும் அழகான குரல்வேற... நான் சுற்றியும் தேடிப்பார்த்து களைச்சுப்போய்.. கடலலைகளையே பார்த்தேனா...


இரண்டு அலைகள் ஒன்றுக்கு பின்னாடி ஒன்று வந்து நேசம் பேசுறாங்க எங்கமேல தூறல்ளைத் தூவிக்கிட்டே... அவங்களும் Love பண்ணுறாங்களாம்...




நாங்க விடுவமா.. பாக்கலான்னு... அலைகள் கிட்ட சொன்னோம்... உங்க காதலா இல்ல எங்க காதலா.. Challenge அப்பிடின்னுட்டு Love பண்ண ஆரம்பிச்சோம்...


மணல்ல நாங்க கைகோர்த்து நடந்தபோது.. அலைகள் வேகவேகமா வந்து எங்க கால்த் தடங்களை அழிக்க ரொம்வே Try பண்ணாங்க.. மறுபடியும் நாங்க கைகோர்த்துக்கிட்டே நடக்க நடக்க மீண்டும் எங்களோட தடங்கள்.... அலைகளும் சோர்ந்து போய்ட்டாங்க..




கொஞ்சநேரத்துல எங்களுக்குள்ள பெரிய சண்ட வந்தது... அலைகளுக்கு பெரிய சந்தோஷம்....கை தட்டிக்கிட்டே வெள்ளை வெள்ளையா பால் நிறத்துல சிரிப்புக் காட்டினாங்க... அடுத்தநொடியே நான் சிரிச்சுக்கிட்டே இவன் தோள்மேல சாய்ந்தனா? என்ன ஒரு ஆக்ரோஷம் அலைகளுக்கு... வேகமா வந்து எங்கமேலா அவங்க சாரலைத் தூவினாங்க.. நாங்களும் எங்க வெற்றிக்கான பரிசு தானே அப்பிடின்னுட்டு அதிகமாவே நனைஞ்சோம்...


என்னசொன்னாலும் இவன்கேட்வே மாட்டான்.. எப்ப Beach போனாலும் இவனுக்கு முத்தம் கொடுக்கனும்... அன்றும் அப்பிடித்தான்.. அலைகளை விட்டு தூரப்போய்த்தான் என் உதட்ட அவன் உதட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டான்.. அப்பகூடப் பாருங்க அலைகளும் எங்களப் பார்த்துக்கிட்டே முத்தம் கொடுத்துக்கிட்டாங்க... ஆனாலும் எங்ளோட நீண்ட நேர முத்தத்துல இருந்த பாசத்தக் கண்டுகிட்டு 
நம்மால முடியாதுப்பா.. அப்பிடின்னு தாம் தோல்விதான் என்று துவண்டுபோய் கடலுக்கு அடியில் போய் சேர்ந்துக்கிட்டாங்க...




அன்றுல இருந்து நாங்க Beach பக்கம் போறதில்லங்க... ஏன்னா எங்க காதலப் பார்த்து எத்தன காதல் கூச்சப்படுமோ அப்பிடீங்கிற நல்ல எண்ணத்திலதான்..


அன்புடன் சஜீ..

ஒரு I LOVE YOU சொல்லேன்..

நேரம்: காலை 7.33 
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
என்னோட போன்தான் Nokia Toneல கூப்பிடும்..
பக்கத்துல என்னோட Friend
'அடி ஒன்  Phone Ring பண்ணுது'
பாதி தூக்கத்துல நான் காதுல சொருகிக் கொண்டே...
'Hello'
'Good morning  Babi.., I Love You..'
Wash Room போகல்லயா நீ... போவேன்..'
அவன் சொல்லுவான்...
'Wash Room இல ஆக்கள்.. நீ I Love You ஒன்டு சொல்லு..'
'பக்கத்துல Friend தூங்குறாடா... பிறகு சொல்றேன்'
'Friend தூங்கினா.., நீ
I Love You சொல்ல மாட்டியா...'
'பெரிய இம்சை ஒன்னோட.., I Love You.....  போய் குளிடா முதல்ல...'
'Thank you darling...' 


 
நேரம்: காலை 08.43
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'சொல்லு டா'  இது நான்,
'Bus halt  இல நிக்கிறன் செல்லம்'
ஆஹா இந்த Bus எப்பப்பா வந்து தொலையும் மனசுக்க நெனச்சுப்பன்
'சரி சொல்லு'
'நீ என்ன தங்கம் செய்ற..'
'இப்பதான் எழும்பினன் டீ குடிக்கப் போறன்..'
சரி நீ ஒரு I Love you ஒன்டு சொல்லேன்.... அப்பதான் நான் Officeல நிம்மதியா Work பண்ணுவேன்..'
டேய்... என் பக்கத்துல  Friends எல்லாம் இருக்காங்க நான் சொல்ல மாட்டேன்'
'நான் Office போக மாட்டேன் இப்பிடியே திரும்பி வீட்டுக்குப் போறேன்..'
'சரி டா சரி I Love you'
'Love you tooடா குட்டி Bye...'



நேரம்: மதியம் 01.38
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'Hello Darling.. Lunch Time.. நான் சாப்பிடப் போறேன்..
ஒரு I Love you சொல்லு'
எவன் டா இந்த
I Love you கண்டு புடிச்சான் எனக்குள்ளேயே திட்டிக்கிட்டே..
'டேய் ஒன் officeல உன்னோட யாருமே இல்லையா டா? நீ பாட்டுக்கு I Love you கேக்குற?'
'இருந்தா எனக்கென்ன நான் உன்ன love பண்றேன் தானே?
'சரி டா I Love You'
 'I love u So much darling… நீயும் சாப்பிடு..'




நேரம்: அந்திப் பொழுது 05.38
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'Office விட்டு வந்துட்டேன் தங்கம் வீட்டுக்கு போறேன்.. சரியான Tired டா... tired எல்லாம் போற மாதிரி ஒரு I Love You சொல்லேன்..'
'சரி வேலயெல்லாம் சரியா முடிச்சியா... சாப்பிட்டு வீட்டுக்கு போ...
I love u so much'
'நீ சொன்னா நான் சாப்பிடாமப் போவனா... I love u more than everything my dear”



நேரம்: இரவு 10.54
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'குட்டி நான் தூங்கப் போறேனே... கனவுல எல்லாம் நீயே வாற மாதிரி ஒரு I Love you சொல்லு டா என் செல்லம்'
'ஏன் டா எப்ப பாரு I Love You...
I Love You... ன்னு அதயே கேக்குறியே... உனக்கு சளிப்பு வராதா?
'Never தங்கம் நான் எப்பவுமே உனக்கு, உனக்கு மட்டும் தான் சொல்லுவன் I love u Babi..
'I love u so much…  good night… Sweet dreams..'
'I love u more and more… good night...'
'போன வெக்கிறேன் டா'
'இன்னுமொரு I Love You சொல்லிட்டு வையேன்டா குட்டி'
நான் சிரிச்சுக்கிட்டே...
'சீ... போன வை டா'

எந்த நிமிடத்தையும் எனக்காகவே அர்ப்பணிக்கும் என்னவனுக்காக..
என் இதயத்திலிருந்து...
"I love you u so much my sweet heart...”


அன்புடன் சஜீ..

புதிதாய் வளா்வாள்....

புதிதாய் நான் இன்று
இவ்வுலகில் பிறக்கின்றேன்...
பிறந்து வளா்ந்திட்ட வயதானவா்களே...
நானும் வளர கை கொடுங்கள்..

அன்புடன் சஜீ..